Wednesday, July 9, 2008

நூல் அறிமுகம்


தெலூஸ் கத்தாரி


அ) மிக அபூர்வமாக இருவர் இணைந்து பணியாற்றுவது சாத்தியமாகின்றது. கிலே தெலூஸ் 1925ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தார். சோர்போனில் உயர் கல்வியைக் கற்றார். ழான் பால் சார்த்தாரினதும், ஃபூக்கோவினதும் சிந்தனைகளால் தாக்கமடைந்தார். 1957 வரை ஆசிரியராகப் சேவையாற்றினார். அதன் பின்னர் சோர் போன் பல்கலைக்கழகத்திலும் சென்டர் நெஷனல் டீ ரிசேர்ச் சயன்டிபிக் நிறுவனத்திலும், பாரிஸ் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றினார்.


இவர் அதிகமாக புகைப்பிடிப்பவராகக் காணப்பட்டார். அதனால் சிறிது காலத்திலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அது சுவாசக் குழாய் முழுவதும் பரவியதால் பேசும் ஆற்றலை இழந்தார். 1995ல் அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து ஜன்னல் வழியே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.


இவரின் சகாவான பியரி ஃபெலிக்ஸ் சர்தாரி ஏப்ரல் 30, 1930ம் ஆண்டு பிரான்ஸில் பிறந்தார். 1950களில் லாக் லகானிடம் பயிற்சிக்குச் சேர்ந்தார். 1955 முதல் 1965 வரை கம்யூனிஸ குழுவொன்றுடன் இணைந்து செயற் பட்டவர் 1992ல் மரணித்தார்.


ஆ) தெலூஸ் கத்தாரி சந்தித்துக் கொண்டது 1968ம் ஆண்டாகும். இருவரும் சந்தித்து சிறிது நேரத்திலே நண்பர்களானார்கள். இவர்கள் இணைந்து முதலாவதாக எழுதிய நூல் ஈடிபசுக்கு எதிராக; முதலாளித்துவமும், மனப் பிறழ்வும் என்ற நூலாகும். இ)இருவரினதும் முக்கியமான கோட்பாடு ரை சோம் எனப்படுவதாகும். இதனை மொழிபெயர்த்தால் கிழங்கு போன்ற என்ற கருத்தைத் தரும். எனினும் இதை விடவும் விரிந்த கருத்திலே ரைசோமை இருவரும் பயன்படுத்தினர்.
நன்றி: மீள்பார்வை-153

No comments: