Wednesday, July 9, 2008




பார்த்




அ) பார்த் 1915ம் ஆண்டு பிரான்ஸின் சர்போ எனும் ஊரில் பிறந்தார். அவர் பிறந்த அடுத்த வருடமே அவரது தந்தையார் இறந்துவிட்டார். அதனால் மிகவும் சிரமத்துடனே அவரது வாழ்க்கை ஆரம்பமாகியது. 1924ம் ஆண்டு பாரிஸுக்குச் சென்ற பார்த் அங்கு லைசிமாண்டே, லைசி லூயி, டி கிராண்ட் ஆகிய பாடசாலைகளில் கற்றார். இலக்கியம், கிரேக்க தத்துவவியல், இலக்கணங்கள், மொழியியல் போன்ற துறைகளில் பார்த் ஆர்வம் செலுத்தினார்.




1934ம் ஆண்டு இவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். மீண்டும் அவர் லைசீஸ் பாடசாலையில் ஆசிரியராக இருந்தபோது காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஐந்து வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்தக் காலப்பிரிவில் அதிகமான புத்தகங்களை வாசிக்கத் தவறவில்லை.




ஆ) 1964ம் ஆண்டு அவரது கட்டுரைகள் நூலுரு பெற்றன. அவற்றிற்கு எதிராக சோர்போன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரேமாண்ட் என்பவர் கடுமையாக விமர்சித்து கட்டுரை ஒன்றை எழுதினார். இதையடுத்து பார்த்தின் புகழ் உலகெங்கும் பரவியது. அக்கட்டுரைக்கு எதிராக விமர்சனமும் உண்மையும் என்ற இன்னொரு கட்டுரையை பார்த் எழுதினார்.




இ) பார்த்தைப் பற்றி பார்த், கண்ணீரின்றி, பிரசித்தம் இன்பமாகும் ஆகிய நூல்களையும் பார்த் எழுதினார். 1980ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு பிற்பகலில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டிடத்துக்கு எதிரே இருந்த உணவகத்தில் உணவருந்தி விட்டு பாதையைக் கடக்கும்போது வாகனத்தால் மோதுண்டு தூக்கியெறிப் ட்டார். நான்கு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர் திடீரென்று மரணித்தார்.

No comments: